மாநில உரிமைக்காக மார்க்சிஸ்ட் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் திமுக ஆதரவு

சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவரின் அறிவுரைப்படி, மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பா.ஜ. அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 8ம் தேதி (வியாழக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, ஒன்றிய பா.ஜ. அரசிற்கு எதிராக தமது கண்டனக் குரலை எழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளாக கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும்.

The post மாநில உரிமைக்காக மார்க்சிஸ்ட் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் திமுக ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: