ஜெயக்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி:
தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய ஜெயக்குமார் மறைந்த செய்தி என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது. அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களெனத் தலைமைக் கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். தலைமைக் கழகத்தால் எடுக்கப்படும் முடிவுகளைப் பிழைதிருத்தம் செய்து அவற்றை வெளியிட்டதில் அவர்கள் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பாசத்துடன் பழகிய ஜெயக்குமார் திருமணத்தை நடத்தி வைத்தேன், அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன், அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன், உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமாரை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது. அறிவாலயம் ஜெயக்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post திமுக தலைமைக் கழக துணை மேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.