பொதுசேவையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரசியல் தலைவர் விஜயகாந்த் : பிரதமர் மோடி இரங்கல்

சென்னை : தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பால் பல கோடி பேரின் இதயங்களை வென்றவர் விஜயகாந்த். பொதுசேவையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரசியல் தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பொதுசேவையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரசியல் தலைவர் விஜயகாந்த் : பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: