டெல்லி போலீஸ் பள்ளியில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீயில் கருகின

புதுடெல்லி: டெல்லி போலீஸ் பள்ளியில் நேற்றிரவு நடந்த தீ விபத்தில் 450க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகின. தலைநகர் டெல்லியின் வஜிராபாத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 250 இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாகின.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர், 8 மீட்பு வாகனங்களுடன் வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் தீ பரவல் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. உள்ளூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

The post டெல்லி போலீஸ் பள்ளியில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீயில் கருகின appeared first on Dinakaran.

Related Stories: