டெல்லிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தலையிட்டு யமுனையில் நீர்மட்டம் மேலும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் அதிக நீர் திறப்பால் யமுனை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. டெல்லியில் 2நாளாக மழை பெய்யாத நிலையில் தடுப்பணை நீர்த்திறப்பால் யமுனை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post டெல்லிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Related Stories: