மேலும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த நடன இயக்குனர் மாரி என்பவர் மீதான பாலியல் குற்றசாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கெனடாவில் இருந்து சங்கத்திற்கு வந்த கௌரி சங்கரை தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என கூறி அவசர குழு கூட்டம் நடைபெற்றது. தன் மீது தவறு உள்ளதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் கூறியதாலேயே அவசர பொதுக்குழு கூட்டப்பட்டதாக துணை தலைவர் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தற்போது பதவி விளக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட மறுத்து தன்னையும் தன் ஆதரவாளர்களையும் தினேஷின் ஆதரவாளர்களை இழிவாக பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தினேஷ் மற்றும் கல்யாண் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என கூறி கல்யாண் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை அடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
The post நடனக் கலைஞரை தாக்கிய விவகாரம்: தினேஷ் மாஸ்டர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல் appeared first on Dinakaran.
