கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து

கடலூர்: கடலூர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 3 பேர் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகினர்.

கடலூர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனது தாய் மற்றும் பாட்டியை சுபநிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். மாலையில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக இவர்கள் மூவரும் வழிசோதனைபாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது புஷ்பராஜின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செல்போனை தூக்கி ஏறிய முற்படும்போது இருசக்கர வாகனம் சாலையில் விழுந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற புஷ்பராஜ், தாய் மற்றும் பாட்டி ஆகிய மூவரும் காயமடைந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

செல்போன் வெடித்ததில் புஷ்பராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தாலும், இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தத்தில் அதிக காயம் ஏற்பட்டுள்ளது. செல்போன் வெடித்தது காரணம் குறித்தும், விபத்து குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: