சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

மதுரை, மே 18: மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. இந்த பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவத்தை, madurai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், 164, காமராஜர் சாலை, சந்தைபேட்டை, மதுரை-9 என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்

The post சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: