அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை அடிப்படையில் சத்துணவு திட்ட அமைப்பாளராக பணி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை என வழக்கு தொடரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோமதி என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஆணையிட்டு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: