இனி ஒரு தேர்தல் இருக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முடிந்த வரை போராட வேண்டும். இது உம்மன்சாண்டி இல்லாத முதல் தேர்தலாகும். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வோம் என்றார். உம்மன் சாண்டி பலமுறை புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட போதிலும் இதுவரை அவரது மனைவி மரியாம்மா உம்மன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தற்போது இந்தத் தேர்தலில் முதன் முதலாக அவரும் பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்று கோட்டயத்தில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மகன் சாண்டி உம்மன், மகள்களான மரியா உம்மன், அச்சு உம்மன் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சு உம்மனும், ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனியும் சிறுவயது முதலே நெருங்கிப் பழகி வருகின்றனர். நாங்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பத்தனம்திட்டா பகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் அனில் ஆண்டனிக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று அச்சு உம்மன் கூறியுள்ளார்.
The post கடைசி வரை காங்கிரஸ் தான்: எங்கள் குடும்பத்தில் யாரும் பா.ஜ பக்கம் செல்ல மாட்டார்கள்; உம்மன்சாண்டியின் மனைவி பேட்டி appeared first on Dinakaran.