ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

 

கரூர், ஜூலை. 26: ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமை வகித்தார். செயற்குழு நிர்வாகி ரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் மோகன்குமார், நிர்வாக குழு லட்சுமிகாந்தன், மாதர் சங்க நிர்வாகி கலாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மணிப்பூர் மாநில மக்களை பிளவுப்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: