கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

 

கரூர், ஜூலை 6: கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. ராகி மாவு அரைக்கும் நிலையத்தை கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா ரிப்பன் வெட்டி திறந்தும் ராகி மாவு அரைக்கும் இயந்திரத்தை இயக்கி வைத்தும் மேலும் விற்பனையையும் துவக்கி வைத்தார்.

இதில் துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், திருமதி, பிச்சைவேலு, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாட்சியர் அபிராமி, கூட்டுறவு சார் பதிவாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் நியாய விலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

The post கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: