இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சன்ஜித் ராஜை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் கல்யாணசுந்தரம் (61) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
The post குரோம்பேட்டை அருகே கல்லூரி பேருந்து மோதி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.