கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய 3 பேர் கைது!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய புகாரில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. இருசக்கர வாகனத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் வந்தபோது தடுத்து நிறுத்தி போக்குவரத்து காவலர் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார். வாகனத்தை தடுத்த போக்குவரத்து காவலர் ஆனந்தை தரக்குறைவாக பேசி 3 பேரும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. காவலர் ஆனந்த் அளித்த புகாரில் சாகுல் ஹமீது, ஹபீப் அலி, அலாவுதீன் முகமது உசேன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: