அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்தது. இதனால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே பல்கலைக்கழகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த மின்னஞ்சலில் ‘இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், முடித்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் பதறியடித்த பல்கலைக்கழக ஊழியர்கள் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழிக்க செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் நள்ளிரவு சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு இது வெறும் புரளி என தெரியவந்ததால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பியவர் யார் என சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அண்ணா பல்கலையில் பரபரப்பு நிலவியது.

The post அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: