சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர். எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் பிடிபட்டது. பயணி கொண்டு வந்த கைப் பையின் கீழ் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பு போதைப்பொருள் சிக்கியது. சுற்றுலா விசாவில் வந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரடிலீன் என்ற பயணியிடம் சோதனையிட்டபோது சிக்கியது. போதைப்பொருளை மும்பை, டெல்லிக்கு ரயிலில் எடுத்துச் செல்வதற்காக விமானத்தில் கடத்தி வந்ததாக பயணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: