இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உமாதேவி, குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். ஆனால் நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து தீயணைப்பு படையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி உமாதேவி, குழந்தை மோகனாஸ்ரீயை சடலங்களாக மீட்டனர். உமாதேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கிணற்றில் விழுந்த குழந்தை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி பலி appeared first on Dinakaran.
