இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் கவர்னர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 28ம் தேதி வெளிநாடு செல்கிறார். பிப்ரவரி முதல்வாரம்தான் சென்னை திரும்புவார். அதனால், தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்த முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். கவர்னர் உரையில், இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வருகிற 23ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த நிறுவனங்கள் குறித்தும், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் : சட்டப்பேரவை கூட்டம் குறித்து முக்கிய விவாதம் appeared first on Dinakaran.