வரவேற்பறை பந்திக்கட்டு, முன்கட்டு, பின்கட்டு என மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய இரண்டு ஏக்கர் வரையிலான பாரம்பரிய பங்களாக்கள் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் ஏராளம் காரைக்குடி பாரம்பரிய சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இந்த வீடுகளை பார்வையிட்டு வந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து ஒரு வித தேக்க நிலை நிலவியது. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் காரைக்குடியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர் என்பதால் இனி சுற்றுலா களைகட்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
The post கொரோனாவுக்குப் பின் களைகட்டும் செட்டிநாடு சுற்றுலா: பாரம்பரிய கட்டடங்களைக் கண்டு வியக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.