சென்னையில் ஆர்டிஓ அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு ஆணை!!

சென்னை : சென்னையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் அனைத்து மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சுறறறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், அரசு உத்தரவுக்கு இணங்க, சென்னை மாநகரில் உள்ள மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்கு செல்வோருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

தற்போது, ​​அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், டிரைவிங் ஸ்கூல் உட்பட அனைத்து வகை பொதுமக்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும்,”என ஆணையிடப்பட்டுள்ளது. இதை பலர் வரவேற்றுள்ளனர். வார நாட்களில் ஓட்டுநர் உரிமம் எடுக்க அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வேண்டியுள்ளது. இனி சனிக்கிழமையும் இயங்குவதால் விடுப்பு எடுக்க தேவையில்லை என மக்கள் கூறுகின்றனர்.

The post சென்னையில் ஆர்டிஓ அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு ஆணை!! appeared first on Dinakaran.

Related Stories: