சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.16 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.16 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது செஇயபட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட ராஜேஸ்வரி மற்றும் ஜெகநாதன் – முத்துலட்சுமி தம்பதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2018-ல் பெருங்களத்தூரில் 2 வீடுகளை வாங்க ஃபிரேம்ஒர்க் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன இயக்குனர் முத்துலட்சுமி, எஸ்.பி.ஐ.யில் கடன் பெற்றார். திட்ட அனுமதி உள்ளதாக வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து முத்துலட்சுமி மோசடி செய்துள்ளார்.

The post சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.16 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: