இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூரிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி மார்ச் 1ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்வது தொடர்பாக பிசிசிஐ இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இந்திய அரசின் அனுமதி அளித்தால் மட்டுமே இந்தியா, பாகிஸ்தான் செல்லும். இல்லையெனில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தபடலாம். இதனிடையே ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த ஆஸி. கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
The post சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது appeared first on Dinakaran.