கோயிலுக்குள் சென்ற ரிஷி சுனக்கும்,அக்ஷதாவும் சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து கோயில் நிர்வாக கமிட்டி அதிகாரி கூறுகையில்,‘‘ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்த போது இருவரும் சிறிது தூரத்துக்கு வெறுங்காலுடன் நடந்து வந்தனர். ரிஷி சுனக்கும் அவரது மனைவியும் கோயிலுக்கு வந்தது பெருமை அளிக்கிறது. மேலும் கோயில் வரலாறு மற்றும் கட்டட அமைப்பு குறித்து அவர் கேட்டறிந்தார். கோயிலில் 45 நிமிடங்கள் செலவிட்டனர்’’ என்றார்.
The post அக்ஷர்தாம் கோயிலில் மனைவியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தரிசனம் appeared first on Dinakaran.