இந்நிலையில் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7வது முறையாக 6 பேர் கொண்ட குழு நேற்று மாலை விண்வெளிக்கு பயணம் செய்தனர். விண்வெளி சுற்றுலா மூலம் ஆந்திராவை சேர்ந்த 30 வயதான விமானி கோபிசந்த் தோட்டகுறா விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த குழுவில் அமெரிக்காவின் முதல் கறுப்பின விண்வெளிவீரரான முன்னாள் விமானப்படை கேப்டன் எட்டோவைடல் இடம்பிடித்துள்ளார்.
மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான் ஹாங் ஏவுதளத்தில் இருந்து நியூ ஷாப்பஹார்ட் என்ற ராக்கெட்டில் இவர்கள் புறப்பட்டனர். பூமியிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர். கார்மன்கோடு அருகே ஈர்ப்புவிசையை இழந்து வீரர்கள் சிறிது நேரம் விண்ணில் மிதந்து மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து வீரர்கள் சென்ற கேப்சுல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் சுற்றுலா பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக விண்ணில் பயணம் செய்து திரும்பிய ஆந்திராவை சேர்ந்த கோபிசந்த் தோட்டக்குறா தெரிவித்துள்ளார்.
The post புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7-வது முறையாக விண்வெளி பயணம்: விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர் ஆனார் ஆந்திர விமானி appeared first on Dinakaran.