அதனால் வரும் ஒடிசா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜக – பிஜூ ஜனதா தளம் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறுகையில், ‘ஒடிசாவில் அடுத்தாண்டு லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும். பாஜக – பிஜூ ஜனதா தளம் இடையே கூட்டணி என்ற ேபச்சுக்கே இடமில்லை. ஒடிசாவில் நடக்கும் தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும். அடுத்தாண்டு ஒடிசாவில் ஆட்சி அமைப்போம்’ என்றார்.
The post மசோதாவுக்கு ஆதரவளித்த நிலையில் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணியில்லை: பாஜக அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.