இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்த கிஷோர் என்பவரின் மூலமாக போபால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலிருந்து எரிசாராயம் கடத்தி வருவது தெரியவந்தது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 50 வயதான தனசேகரன் என்பவர் போபால், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் விநியோகம் செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ள போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர். சுமார் 17 ஆயிரம் லிட்டர் கடத்தல் எரிசாராயத்தில் சேதமடைந்த 1089 லிட்டர் போக மீதமுள்ள 15,911 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
The post போபாலில் இருந்து டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தல்: ஓட்டுநர் உள்பட 20 பேர் கைது appeared first on Dinakaran.