இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான முசாவீர் சாஹிப் உசேன் (30) மற்றும் அப்துல் மதீன் தாஹா (30) ஆகிய 2 பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்களில் முசாவீர் உசேன் தான் ஓட்டலில் குண்டு வைத்ததாகவும், அப்துல் மதீன் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2020ம் ஆண்டு பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
The post பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கொல்கத்தாவில் கைது appeared first on Dinakaran.