அப்போது ஆண் குழந்தை பிறந்தால் ரூ 1.50 லட்சமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார். கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அறிந்த ஜெயா ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அப்போது எனக்கு தெரியாமல் எப்படி 2 பேரிடம் தனித்தனியாக முன்பணம் வாங்கினாய் என சண்டையிட்டார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரும் வாக்குவாதம் செய்வதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோசங்கி தேவி, ஜெயா, ஷபானா பேகம், அமினா பேகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பதி அருகே ஆண் குழந்தை ரூ1.5 லட்சம், பெண்ணுக்கு ரூ1 லட்சம் பேரம்: தாய் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.