நூருல் ஹூடா நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள உத்தாரா என்ற இடத்தில் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீ்ட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை வெளியே இழுத்து அடித்து உதைத்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தேர்தல்களில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
The post மூன்று தேர்தல்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு வங்கதேச மாஜி தலைமை தேர்தல் ஆணையர் கைது appeared first on Dinakaran.
