இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதி மக்கள் எடுத்துச்செல்ல முயன்ற மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை விரட்டியடித்தனர். பின்னர் கவிழ்ந்த லாரியில் இருந்து மதுபாட்டில்களை மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லேசான காயமடைந்த டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆந்திராவில் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: மக்களிடம் இருந்து காப்பாற்ற மதுபாட்டில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.