ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு

பெங்களூரு :கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது சாத்விக் என்ற 2 வயது குழந்தை, மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி குழந்தையை மீட்டனர்.

The post ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: