அவர் ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதனால், ஆடுகள் திருடி வந்து கொடுத்தால் பணம் தருவதாக எங்களிடம் கூறினார். இதை நம்பி நாங்களும் பலமுறை அவருக்கு ஆடுகள் திருடி வந்து கொடுத்தோம். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் மிக மிக குறைவான பணத்தையே கொடுத்தார். சில சமயங்களில் பணமும் கொடுக்காமல் இருந்தார். மேலும் ஆடுகள் திருடும்போது நாங்கள் போலீசில் சிக்கிக் கொண்டோம். ஆனால் எங்களை அவர் ஜாமீனில் எடுக்கவில்லை. மேலும் ஆடுகள் திருட எடுத்துச் சென்ற காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதையும் அவர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் செலவுக்கு பணம் கேட்டபோது அதையும் கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் ஊர்க்காரர்களிடம் எங்களை ஆடு திருடர்கள் என்று கூறி வந்தார். இதனால் நாங்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தோம். மேலும் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, நாங்கள் திட்டமிட்டபடி சனிக்கிழமை இரவு அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது அவரை வழிமறித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கைதான மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், புஷ்பநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post அதிமுக மாஜி கவுன்சிலர் கொலை திருட்டு ஆடுகளுக்கு பணம் தராததால் வெட்டி கொலை செய்தோம்: கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.