இதில், அரசின் முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தி ஏமாற்றியதாக புகாரின் அடிப்படையில், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்கள் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக தன்னிடம் ரூ.50 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டு, ரூ.4 கோடி வாங்கி நமீதாவின் கணவருக்கு பதவி கொடுத்ததாக கோபால்சாமி என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், இருவரும் ஒன்றிய அரசின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதும், மோசடி செய்த பணத்தில் சொத்து வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை முடிந்து இருவரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேநேரத்தில் நடிகை நமீதாவின் கணவரிடம் ரூ.4 கோடி கொடுத்து பதவி பெற்றாரா என போலீசார் போனில் விசாரணை நடத்தினர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், நடிகை நமீதாவின் கணவரிடம் போனில் விசாரித்தோம். தேவைப்பட்டால் அவருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்துவோம் என்றனர்.
The post ரூ.4 கோடி கொடுத்து பதவி பெற்றாரா? நடிகை நமீதா கணவரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.