இது குறித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பெண் காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்ஐஎப் பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்டவை பெண் காவலருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளன. முறையான விசாரணை கோரப்படும் என்றும் குல்விந்தர் கவுருக்கு எந்த அநீதியும் இழைக்கக்கூடாது என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
The post நடிகை கங்கனாவை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு appeared first on Dinakaran.