இதில், ஆட்டோவில் பயணித்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், தலிப் தாகில் மீது வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ சோதனையில் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. இதுகுறித்த வழக்கு மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 5 வருடங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது: விபத்தின் போது குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தலிப் தாகில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. அதேசமயம், சாட்சிகளும், ஆதாரங்களும் அவர், விபத்தை ஏற்படுத்தியதை உறுதி செய்கின்றன. எனவே, அபராதம் விதிப்பதோடு நிறுத்திவிடமுடியாது என்பதால், தலிப் தாகிலுக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
The post போதையில் காரை ஓட்டி விபத்து நடிகருக்கு 2 மாதம் சிறை appeared first on Dinakaran.
