அரவக்குறிச்சி. டிச. 3: அரவக்குறிச்சி பகுதியில் மழை மற்றும் பனியின் காரணமாக உல்லன் கம்பளி உள்ளிட்ட பனிக்கால ஆடைகள் விற்பனை ஆரம்பித்து மும்முரமாக நடை பெறுகின்றது. இளைஞர்கள் சைக்கிள் மற்றும் பைக்கில் சென்று விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போது பெய்யும் தொடர் மழை மற்றும் பனிக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில். மாலையிலேயே குளிர் ஆரம்பித்து இரவில் குளிர் அதிகமாகி, காலை 8 மணி வரை நீடிக்கின்றது. இதனால் அதிகாலை வேலைக்கு செல்பவர்கள், பால்காரர்கள் உள்ளிட்ட பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது. இந்த குளிரிலிருந்து தப்பிப்பதற்கு பாதுகாப்பு மாற்று வழியாக உல்லன் கம்பளி, சால்வை, ஸ்வெட்டர், காதுகளைப் பாதுகாக்கும் உல்லன் தலைக்கவசம் உள்ளிட்ட பனிக்கால ஆடைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் ஜவுளி கடைகளில் பனிக்கால ஆடைகள் விற்பனை ஆரம்பித்து அதிகரித்து வருகின்றது.