மானூரில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்றவர் கைது

மானூர், டிச. 3: மானூர் பகுதியில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்றவரை போலீசார் கைது ெசய்தனர். மானூர் எஸ்ஐ மாடசாமி தலைமையில் போலீசார் வடக்கு செழியநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஒரு யூனிட் கருங்கல் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினர். அரசு அனுமதி இல்லாமல் லாரியில் கருங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரி டிரைவர் கீழப்பிள்ளையார்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த ராம்குமார் (26) மீது வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது ெசய்தனர். மேலும் கருங்கல்லுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: