திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே போலி பத்திரம் பதிவு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 7 பேரை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( 82). இவர் அதே கிராமத்தில் சர்வே எண் 422/1 ல் சுமார் 17 சென்ட் கிராம நத்தம் நிலத்தை முன்னோர்கள் காலம் தொட்டு ஆண்டு அனுபவித்து வருகிறார். இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன், கோபால், அங்கமுத்து, தயாநிதி, நாகமணி, விநாயகம் மனைவி நாகம்மாள், தீபன், முனுசாமி, ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து போலியான பட்டவை தயாரித்து கொண்டு அதில் தமிழக அரசின் கோபுர முத்திரை மற்றும் கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியரின் முத்திரையை வைத்து கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்கள் 2926, 2927, 2928 படி கடந்த அக்டோபர் 10ம் தேதி பதிவு செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் செந்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.