அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவையாறு, டிச. 2: திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவையாறு அடுத்த மேலத்திருப்பந்துருத்தி சேர்ந்த மதியழகன் மகன் வினோத் (20). இவர் குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி கொண்டு திருப்பந்துருத்தி மெயின்ரோட்டில் வந்தார். இந்த தகவல் கிடைத்ததும் நடுக்காவேரி சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து மாட்டு வண்டியை மறித்து சோதனை நடத்தினார். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் வினோத்தை கைது செய்தார். அதேபோல் திருச்சோற்றுத்துறையை சேர்ந்த கதிரவன் (30) என்பவர் மாட்டு வண்டியில் குடமுருட்டி ஆற்றில் மணல் ஏற்றி கொண்டு வந்தார். அப்போது நடுக்காவேரி சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் சோதனை நடத்தியபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் கதிரவனை கைது செய்தார்.

Related Stories: