திருவெறும்பூர், டிச.2: திமுக இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு 70 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கல்வெட்டையும் திறந்து வைத்தார். திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, பெல் தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளர் தீபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேசுகையில், 120 நாளில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நாளில் திருச்சியில் இன்று (நேற்று) தேர்தல் பிரசாரம் தொடங்குகிறது.