சிவகிரி, டிச. 2: சிவகிரி அருகே சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள், பைக், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் பகுதியில் எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் பேச்சியப்பன் (34) என்பவர் பைக்கில் வைத்து மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.