செஞ்சி, டிச. 2: செஞ்சி அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (64) விவசாயி. இவரது மனைவி குணசாலி (59). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குணசாலி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.