சூலூர், நவ.30: சூலூரில் பைக்கில் வந்த வாலிபர் மழையினால் ஏற்பட்ட குழியில் தவறி விழுந்து பலியானார். சூலூர் அருகே வி.கே.என். தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் கெளதம் (26). தந்தை நடத்தும் கடையை மேற்பார்வை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று கௌதம் தனது பைக்கில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சூலூரில் இருந்து சோமனூர் சென்று கொண்டிருந்தார். ரயில்வே பீடர் ரோட்டில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது.அங்கு மழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.