பெரம்பலூர், நவ.30: பெரம்பலூரில் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் வேளா ண்மை தொழில் நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மா னாவாரி ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து 2 நாள் பயிற்சிமுகாம் நடந்தது.
பெரம்பலூரில் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானாவாரி ஒருங்கி ணைந்த பண்ணையம் குறித்து 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. பெரம்பலூர் மா வட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் கருணாநிதி தலைமை வகித்து பயி ற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: விவசாய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதால் ஆண்டு முழுவதும் குறிப்பாக, விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்ந்து வருமா னம் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பண்ணைக் கழிவுகளை சுழற்சி செய்வ தால் மகசூல் அதிகரிக்கும் என்றார். ஆலோசகர் பாலகிருஷ்ணன் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், வேளாண் அலுவலர் கருணா நிதிதிட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.