தூத்துக்குடி, நவ. 30: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினருக்கான பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இரு இடங்களில் மதுவிலக்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2ம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை இரு ஆண்டுகள் பணிக்காலம் முடித்த 26 காவல்துறையினருக்கும், சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களிலிருந்து மதுவிலக்கு காவல் நிலையங்களில் நிரப்பப்பட வேண்டிய 34 காவல்துறையினருக்கும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி ஏடிஎஸ்பி கோபி மற்றும் டிஎஸ்பி கணேஷ் முன்னிலை வகித்தனர்.