சாத்தான்குளம், நவ. 30: கருங்கடல் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. சாத்தான்குளம் அருகே கருங்கடல் ஊராட்சி மன்றத் தலைவராக பழனியப்பபுரத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி (49) இருந்து வருகிறார். இதனிடையே ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பொருட்டு ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சார்பில் பேட்டரியால் இயக்க கூடிய இரு ஆட்டோ வாகனம் வழங்கப்பட்டன.
இவ்விரு வாகனங்களையும் கடந்த 26ம்தேதி பணிகளை முடிந்தபிறகு ஊராட்சி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் விட்டுச் சென்றனர்.