பரமத்தி வேலூர், நவ.30: பரமத்திவேலூர் அருகே நல்லூரில்,செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும்போது அருகிலுள்ள சித்தளந்தூர் மின் வாரிய அலுவலகத்திலிருந்து பணியாளர்களை வரவழைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு, சுமார் 10 மணியளவில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சித்தளந்தூர் மின் நிலைய அலுவலகத்தில் பணியாற்றி வரும் நல்லூர் காளியப்பனூரைச் சேர்ந்த காளியண்ணன்(45) என்பவர் பழுது நீக்குவதற்காக வந்துள்ளார்.