பொன்னமராவதி அருகே ஆலவயலில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி,நவ.27: பொன்னமராவதி அருகே ஆலவயலில் 12அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் குளவாய்க்காட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மலைப்பாம்பு கிடப்பதாக வனத்துறையினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சக்திவேல் தகவல் தெரிவித்தார். வனக்காப்பாளர் கனகவள்ளி, வனக்காவலர் கருணாநிதி ஆகியோர் அங்கே வந்து பதுங்கியிருந்த 12அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து செவிலிமலை வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories: