பெரம்பலூர், நவ. 27: கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதைபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் திருவண்ணாமலை எனப்படும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதுகுறித்து பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் அருளாசிபெற்ற சுந்தரமகாலிங்கம் சித்தர், தவசிநாதன் சித்தர் ஆகியோர் கூட்டாக தெரிவித்ததாவது: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபத்தையொட்டி வருகிற 27, 28, 29ம் தேதிகளில் அகவல் பராயணம் நடக்கிறது. 29ம் தேதி 210 சித்தர்கள் யாகபூஜை, கோபூஜை, அஸ்வ பூஜை நடக்கிறது.