வேலூர், நவ.25: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று மதியம் கலெக்டர் சண்முகசந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் உழவு மாடுகள், எருதுகள், கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதில் கறவை மாடுகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வரும்.ஒவ்வொரு வாரமும் இச்சந்தையில் ₹1 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.
ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்களுக்கு பொய்கை மாட்டுச்சந்தை நேற்று மக்கள் நெரிசலுடன் காணப்பட்டதுவெறிச்சோடியே காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு சந்தை களைக்கட்டும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யானது. இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் கறவை மாடுகள், எருதுகள் என கால்நடைகள் அதிகளவில் வந்திருந்தன. இதனால் வர்த்தகமும் வழக்கமான நிலையை எட்டியது. இன்று வர்த்தகம் ₹1 முதல் ₹1.10 கோடி வரை எட்டியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.